ஆப்நகரம்

சதுரகிரி மலைப்பாதையில் பயங்கர தீ விபத்து.. பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை..!

சதுரகிரி மலை கோவிலுக்கு செல்லும் பாதையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 1 Oct 2022, 10:43 am

ஹைலைட்ஸ்:

  • விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை
  • மலைக்கோவிலுக்கு செல்லும் மற்றொரு பாதையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் நடவடிக்கை.
  • அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் ஏராளமான பக்தர்கள் காத்திருப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோயிலானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க பூமி என அழைக்கப்படுகிறது. மேலும் சதுரகிரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.
இந்த கோயிலுக்கு மாதந்தோரும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சகரகிரி கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் புரட்டாசி மாத பிரதோஷம், மகாளய அமாவாசை முன்னிட்டும், நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும் கடந்த 23 ஆம் தேதிமுதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை மொத்தம் 13 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல கோயில் நிர்வாகம் சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் இந்த நாளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது; கலெக்டர் அதிரடி!

இந்நிலையில் சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்லும் மற்றொரு மலைப்பாதையான சாப்டூர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அனுமதி மறுக்கப்பட்டதால் அடிவாரப் பகுதியான தாணிபாறை பகுதியில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி