ஆப்நகரம்

சதுரகிரியில் பற்றி எரியும் காட்டுத்தீ; பிரதோஷ தினத்தில் பக்தர்களுக்கு வந்த சோதனை!

சதுரகிரி மலையில் காட்டுத்தீ பற்றி எரிவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பிரதோஷத்திற்கு வருகை தந்த பக்தர்கள் அடிவாரத்திலேயே சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 7 Oct 2022, 11:15 am

ஹைலைட்ஸ்:

  • சதுரகிரி மலையில் காட்டுத்தீ பற்றி எரிவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தடை
  • பிரதோஷத்திற்கு வருகை தந்த பக்தர்கள் அடிவாரத்திலேயே சாமி தரிசனம்
  • கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சதுரகிரியில் பற்றி எரியும் காட்டுத்தீ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி நாட்கள் மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவில் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் கடந்த 13 நாட்களாக நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் இன்று புரட்டாசி மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர அனுமதி அளித்திருந்த நிலையில் சதுரகிரி மலையில் கோயிலுக்கும் செல்லும் பாதைகளில் திடீர் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி இன்று பிரதோஷத்திற்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டிருந்தது.

12 அம்மன்கள் அணிவகுத்து செய்த மகிஷ சம்ஹாரம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

இன்று பிரதோஷத்தை முன்னிட்டு வருகை தந்த பக்தர்களுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படாததால் அடிவாரப் பகுதியிலேயே சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் பக்தர்கள் திரும்பி சென்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி