ஆப்நகரம்

சதுரகிரி: ஆடி அமாவாசை திருவிழா.. இந்த நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 21 Jul 2022, 5:00 pm

ஹைலைட்ஸ்:

  • இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆடி அமாவாசை திருவிழா
  • சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
  • பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்படும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையோட்டி நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். பிரதி தமிழ் மாதம் தோறும் அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜைகளுக்கு இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும்.

குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட பிரதான அமாவாசை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து மலையேறி சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை திருவிழா வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தினத்தன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சித்தர்கள் இன்றளவும் வாழும் பெருமை வாய்ந்த இந்த சதுரகிரி மலைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.க்ஷ பக்தர்களுக்கு உண்டான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வரும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 4 நாட்கள் மட்டும் அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்படும். பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. பக்தர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில பொதுச் செயலாளர் உட்பட 500 பேர் கைது... விருதுநகரில் பரபரப்பு!

மேலும் கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பின்பு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 2000 க்கும் மேற்பட்ட வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி