ஆப்நகரம்

பயிர்க் காப்பீட்டுக்கும் போர்க்கொடி தூக்கிய விவசாயிகள்

30 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெம்பக்கோட்டையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 18 Dec 2020, 10:00 am
பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil farmers protest


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயிகள் முறையாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெம்ப கோட்டையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயிர்க்காப்பீடு வழங்குவதில் காலமுறைகளை குறிப்பிட்டு விவசாயிகளுக்கு முறையாக கிடைக்கக் கூடிய இழப்பீடு மற்றும் காப்பீட்டு தொகை வழங்குவதற்கான அடங்கல்களை அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக வழங்க வேண்டும் என்று கூறி 30 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெம்பக்கோட்டையில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#விவசாயிகளின்_நண்பன்_மோடி... பாஜகவின் அடுத்த யாத்திரை

பின்னர் தோட்டக்கலைத்துறை அலுவலர் ஜோதிபாசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடிய விரைவில் அனைவருக்கும் முறையாக பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்

அடுத்த செய்தி