ஆப்நகரம்

செவிலியர்களை தாக்கும் தொற்று..! விருதுநகரில் தாண்டவம் ஆடும் கொரோனா...

சாத்தூரில் செவிலியர் உட்பட 4 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Jun 2020, 6:48 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு கட்டங்களாக ஊரடங்கு போடப்பட்டது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் விதிகள் தளர்த்தப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகமானது. இந்நிலையில் இதுவரை சாத்தூர் பகுதிக்குள் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகாத நிலையில் இன்று மூன்று நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
Samayam Tamil விருதுநகரில் தாண்டவம் ஆடும் கொரோனா


பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:

திருவள்ளுவர் மாவட்டம் திருநின்றவூரில் இருந்து கடந்த 22ம் தேதி சாத்தூர் அருகே வெங்கடசலபுரம் குறிஞ்சி நகருக்கு வந்துள்ள 21 வயதான வாலிபர், சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக வேலைபார்க்கும் 35 வயதான செவிலியர் இருவரையும் சிகிச்சைக்காக சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல சாத்தூர் நடராஜதியோட்டர் தெருவை சேர்ந்த சிவகாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்த 42 வயதான பெண் உடல்நிலை சரியில்லை என்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு எடுக்கபட்ட பரிச்சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டது.

தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு!

அதே போல் எட்டக்காபட்டியில் உள்ள 28 வயதான நபருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தங்கி இருந்த எட்டக்காபட்டி வெங்கடாசலபுரம் மற்றும் நடராஜாதியேட்டர் சாலை பகுதிகள் என அனைத்தும் தனிமைப் படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி