ஆப்நகரம்

இன்ஸ்பெக்டருக்கு வந்தது சோதனை; வெளியே சொல்ல முடியாத வேதனை!

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்த சோதனை, யாரிடமும் சொல்ல முடியாத வேதனையாக உள்ளதால் என்ன செய்வது? என புரியாமல் காவல் துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.

Samayam Tamil 4 Dec 2021, 9:27 pm

ஹைலைட்ஸ்:

  • இன்ஸ்பெக்டருக்கு வந்தது சோதனை
  • வெளியே சொல்ல முடியாத வேதனை
  • விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கொள்ளை போன வீடு
கொள்ளை போன வீடு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதிபோர்டு காலனி பகுதியை சேர்ந்தவர் பாக்கியமேரி. இவர், சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது கணவர் ஜான்பிரிட்டோ. அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறார். தம்பதி இரண்டு பேரும் வேலைக்கு சென்றுவிட்டனர். பின்னர் மீண்டும் இன்று பணி முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்க்கும் போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 13 .5 பவுன் நகை மற்றும் 28 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்சில் கிடைத்த அதிர்ஷ்டம்; பழங்குடி பெண்ணுக்கு ஹேப்பி நியூஸ்!

இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலீசார் சோதனை செய்ததில் நகை மற்றும் பணம் திருடு போனது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் நகை பணம் திருட்டு போனது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி