ஆப்நகரம்

வரப்போகிறது தளர்வு... மீண்டும் ஓட தயாராகும் பஸ்கள்!

விருதுநகர் அரசுப் போக்குவரத்து பணிமனையில் இயக்கத்திற்குத் தயாராகி வரும் அரசு பேருந்துகளால் மாவட்ட மக்கள் ஆறுதல் அடைந்து வருகின்றனர்.

Samayam Tamil 25 Jun 2021, 6:41 pm
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மூன்று மாதங்களுக்கு மேலாக விருதுநகர் மாவட்டத்தில், பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து பணிமனையில் அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil வரப்போகிறது தளர்வு: பணிமனையில் போக்குவரத்து சேவைக்குத் தயாராகும் பேருந்துகள்!


தற்பொழுது மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையத் துவங்கியுள்ளதால் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு தளர்வுகள் அளிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து விருதுநகர் அரசுப் போக்குவரத்து பணிமனையில் பேருந்துகள் பராமரிப்பு பணி நடைபெறத் தொடங்கியுள்ளது.

இதில் பணிமனையில் உள்ள 74 நகர் பேருந்துகளைப் பராமரிக்கும் பணியில் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் மற்றும் வாகன பழுது நீக்கும் நபர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாமியாரை கொலை செய்த மருமகன்: வக்கீல் நோட்டீஸ்தான் காரணமா?
பேருந்துகள் அனைத்தும் ஓட்டுநர்கள் மூலம் இயக்கப்பட்டது. அதிலுள்ள குறைகளைக் கண்டறிந்து, அதைச் சரி செய்து அவற்றை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. மூன்று மாதங்களாக இயங்காமல் உள்ள பேருந்துகள் விருதுநகரில் தயாராகி வருவது மக்களிடையே நிம்மதியை வரவழைத்துள்ளது.

அடுத்த செய்தி