ஆப்நகரம்

காணாமல் போகும் திமுக அரசு?; திருமாவை இழுத்து இந்து முன்னணி வம்பு!

திமுக அரசு காணாமல் போவதற்கு திருமாவளவன் ஒரு காரணமாக இருப்பார் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 1 Jul 2022, 2:56 pm
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்து கொண்டார்.
Samayam Tamil காடேஸ்வரா சுப்பிரமணியம்
காடேஸ்வரா சுப்பிரமணியம்


இதன் பிறகு ஆண்டாள் கோவில் காடேஸ்வரா சுப்ரமணியம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:

நூபுர் சர்மா சொன்ன செய்தி 100% சரியானது. குர்ஆனில் என்ன உள்ளதோ, அந்த செய்தியை சொல்லி இருக்கிறார். ஒரு நாட்டின் பிரதமருக்கே கொலை மிரட்டல் விடுகிறார்கள்.


இதற்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும். அதற்காக சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் பயங்கரவாதிகள் அதிகம் ஒளிந்துள்ளனர். இங்கு கலவரத்தை தூண்ட வேண்டும் என்று சிலர் முயற்சி செய்கின்றனர்.

அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கம்; தலைமைக்கழகம் பெயரில் போஸ்டர்!

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியேற வேண்டும். இந்துக்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். இதற்காக ஆய்வுகள் நடத்துவதில் தவறில்லை.

தீட்சிதர்களை மிரட்டுவது தவறானது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 90 சதவீதம் கோயில்களில் ஆய்வு நடத்தாமல் உள்ளது. தேர் ஓடும் பகுதிகளில் முன்கூட்டியே ஆய்வு நடத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

போக்குவரத்து ஊழியர்கள் ஷாக்; தமிழக அரசு போட்ட உத்தரவு!

கோயில்களுக்கு சொந்தமான பல லட்சம் ஏக்கர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவர்களுக்கு வேண்டாதவர்களிடம் இருந்து மட்டும் நிலங்கள் மீட்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்து கோயில்களை இடிப்பது மட்டும் தான் இந்த அரசின் ஓராண்டு சாதனையாக உள்ளது.

திருமாவளவன் கூட்டணி என்பது திமுகவுக்கு பிடித்த சனி. இந்து பெண்களை தொடர்ந்து விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. இந்த அரசாங்கம் காணாமல் போவதற்கு திருமாவளவன் ஒரு காரணமாக இருப்பார். நாடாளுமன்ற பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். இவ்வாறு காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.

அடுத்த செய்தி