ஆப்நகரம்

இறந்த பெண்ணுக்கு முக்கிய எஸ்எம்எஸ்; குடும்பத்தினர் ஷாக்!

இறந்த பெண்ணின் செல்போனுக்கு வந்த மிகவும் முக்கியமான தகவல் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Samayam Tamil 30 Nov 2021, 7:02 pm
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சொக்கம்பட்டியை சேர்ந்தவர் கோமதி (53). கடந்த ஏப்.8ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டார். அடுத்த சில நாட்களில் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோமதி கடந்த மே.18ம் தேதி இறந்தார்.
Samayam Tamil செல்போன் அழைப்பு
செல்போன் அழைப்பு


இதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி இறந்த கோமதியின் இறப்பு சான்றிதழையும் உறவினர்கள் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் திடீரென அக்.23ம் மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோமதி 2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அவரது மகன் ராஜேந்திரன் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.

நெல்லை அதிசய கிணறு; குவியும் சுற்றுலா பயணிகள்!

இதையடுத்து கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கமும் செய்தார். இந்த தகவல் வைரலாக பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தலைகீழாக நடந்து உலக சாதனை; அதுவும்..எவ்வளவு தூரம் தெரியுமா?

இதுகுறித்து ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இறந்த தாய் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எங்கேயோ தவறு நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக தகவலை தெரிவித்தேன். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

அடுத்த செய்தி