ஆப்நகரம்

கொலை கூட்டா செய்யனும்... ஜாமீன் தனியா?; சக நண்பனையே துவம்சம் செய்த 3 கைதிகள்!

கொலை கூட்டாக செய்யணும்... ஜாமீன் மட்டும் தனியா எடுத்துப்பியா? என கேட்டு சக நண்பனையே ஜெயிலுக்குள் கைதிகள் அடித்து துவம்சம் செய்தனர்.

Samayam Tamil 14 May 2022, 10:24 pm
விருதுநகர் மாவட்டம், வீரசோழன் அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் சிலம்பரசன், இருளாண்டி. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியை சேர்ந்தவர்கள் வசந்தபாண்டி மற்றும் மேலும் ஒரு இருளாண்டி.
Samayam Tamil விருதுநகர் சிறை
விருதுநகர் சிறை


இவர்கள் நான்கு பேரும் திருச்சுழி பகுதியை சேர்ந்த அனந்த் ராஜ் (31) என்பவரை கொலை செய்த வழக்கில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் விருதுநகர் மாவட்ட சிறையில் உள்ளனர்.

இதனை அடுத்து சிலம்பரசன் இந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற மனு தாக்கல் செய்துள்ளார். இதில் மற்ற மூன்று பேருக்கும் ஜாமீன் பெறுவதற்கு சிலம்பரசன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

துர்கா ஸ்டாலின் அள்ளிக்கொடுக்கும் தங்கம்; முதல்வராக்கிய பெருமாளுக்கு நேர்த்தி கடன்!

அதுகுறித்து மூவரும் சிறையில் வைத்து சிலம்பரசனிடம் கேட்டபோது ஜாமீன் எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையே அவர் இரண்டு, மூன்று முறை பதிலாக அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இருளாண்டி, வசந்த பாண்டி மற்றொரு இருளாண்டி ஆகியோர் சிறையிலேயே சக கூட்டாளி சிலம்பரசனை கடுமையாக தாக்க முயற்சித்து உள்ளனர்.

அப்போது அவர்கள், ‘கொலை மட்டும் கூட்டாக செய்ய வேண்டும். ஜாமீன் எடுக்க முடியாதா?’ என கேட்டபடி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் மூன்று பேர் தாக்கியதில் சிலம்பரசனுக்கு பற்கள் உடைக்கப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளார்.

கழுதை பண்ணை துவக்கிய கலெக்டர்; இளைஞருக்கு குவியும்..பாராட்டு மழை!

உடனே அங்கு பாதுகாப்பில் இருந்த சிறை காவலர்கள் சிலம்பரசனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு சிலம்பரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் தாமரைக்கனி அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் மீது விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி