ஆப்நகரம்

இருக்கன்குடி அம்மன் கோயில் ஆடித்திருவிழா நிறுத்தம்... ஆன்லைனில் தரிசிக்க ஏற்பாடு

இன்று பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலின் இணையதளமான www.tnhrce.gov.in என்ற இணையதளம் மற்றும் https://www.youtube.com/channel/UCQ5xyfrEiILCqJp41UDXBw என்ற இணைப்பின் (link) மூலம் நேரலையாக பார்க்கலாம்.

Samayam Tamil 14 Aug 2020, 1:43 pm
பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலின் ஆடி பெருந்திருவிழா கொரானா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil irukankudi amman temple


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில், தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பழம் பெருமை வாய்ந்த திருக்கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளி அன்று ஆடிப்பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆடி கடைசி வெள்ளியன்று, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து அருள்பெற்று செல்வர் இந்த கோவிலில் உள்ள உற்சவர் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்

ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாகவும் பொது ஊரடங்கு அமலில் உள்ளதாலும் பாரம்பரிய முறைப்படி அம்மன் வீதிஉலா நடை பெற இயலாத சூழ்நிலை உள்ளது . எனவே தமிழக அரசின் வழிகாட்டுதல் படியும் இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலர்/ஆணையாளர் அவர்களின் அறிவுரைப்படியும் இத்திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையிலும் இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி அன்று அம்பாள் வீதி உலா தடை செய்யப்பட்டுள்ளது

350 பேருக்கு வேலை போச்சு... இது நியாயமா ஸ்விகி?

இதற்கு பதிலாக உற்சவர் அம்மன் மற்றும் மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மட்டும் நடத்த பட உள்ளது மேலும் உற்சவர் அம்மன் அபிஷேக ஆராதனைகள் பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்தே தரிசிக்கும் வகையில் இணையதளம் வழியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

எனவே பக்தர்களும் பொதுமக்களும் 14.8.2020 அன்று பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலின் இணையதளமான www.tnhrce.gov.in என்ற இணையதளம் மற்றும் https://www.youtube.com/channel/UCQ5xyfrEiILCqJp41UDXBw என்ற இணைப்பின் (link) மூலம் நேரலையாக அம்மன் அபிஷேக ஆராதனை நிகழ்வுகளை தரிசனம் செய்து அம்மன் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேலும் பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு திருக்கோயில் வளாகத்திற்குள் நுழையவும் தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி