ஆப்நகரம்

பாவம் பசுமாடுகள்.. அருப்புக்கோட்டை அருகே அதிரடி!

அருப்புக்கோட்டை அருகே அளவுக்கதிகமான மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 May 2022, 2:48 pm

ஹைலைட்ஸ்:

  • விருதுநகரில் அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றி வந்த லாரி
  • 36 பசுமாடுகள் பறிமுதல்
  • 3 பேர் மீது வழக்கு பதிவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Virudhunagar Cattle Lorry Seized
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியபட்டி காவல்துறையினர் கமுதி - அருப்புக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அதைப் போல இன்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரி வரும் பொழுதே தட்டுத்தடுமாறி மெதுவாக ஊர்ந்து வந்தது. அந்த லாரியை ஆய்வு செய்ததில் சுமார் முப்பத்தி ஆறு பசுமாடுகளை அதில் ஏற்றி மாடுகள் இருக்கும் இடத்தை விட்டு அசைய முடியாத அளவுக்கு நெருக்கமாக கட்டி கொண்டு வந்துள்ளது தெரியவந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதுகுறித்து லாரி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டது, லாரியில் ஏற்றி வந்த பசு மாடுகள் அனைத்தும் கமுதியில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் சந்தைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார். பசுமாடுகளை துன்புறுத்தும் வகையில் லாரியில் அடைத்துப் போட்டு ஏற்றி வந்ததால் பசுமாடுகள் மற்றும் லாரி ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து லாரி ஓட்டுனர் செல்வகுமார் மற்றும் அதில் இருந்த மூர்த்தி, மாணிக்கம் என மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அழைத்து வரும் மாடுகளுக்கு தண்ணீர் மற்றும் தீவனம் எதுவும் அளிக்காமல் அதனை அதிக அளவில் ஏற்றிக் கொண்டு வருவதால் சில சமயங்களில் அவை இறந்துவிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே இதுபோல் கால்நடைகளைத் துன் படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி