மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாக மாலை நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வந்தது. இதனால் பகலில் விவசாய வேலை மற்றும் இதர வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்புவதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் மலைப் பகுதியில் ஆடுகளை மேய்க்க சென்றிருந்தார். தினமும் காலை மாடுகளை மேய்க்கச் செல்லும் முருகன் மாலை வீடு திரும்புவார்.
நேற்று மாலை பெய்த மழையால் வனப்பகுதியில் உள்ள வண்ணாம்பாறை என்ற இடத்தில் ஒதுங்கி உள்ளார். தொடர்ந்து ஆடு மேய்க்கச் சென்ற முருகன் வீடு திரும்பாத காரணத்தை அடுத்து அவரது உறவினர்கள் வண்ணாம்பாறை மற்றும் அவர் வழக்கமாக ஆடு மேய்க்கும் பகுதியில் தேடினர். அப்போது வண்ணாம்பாறை அருகே பாறை ஒன்று உருண்டு விழுந்து கிடந்தது.
எப்படிதான் இவங்களுக்கு மனசு வருதோ... பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய்!
சந்தேகமடைந்த உறவினர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ட்ரில்லிங் மிஷின் மூலமாக பாறையை உடைக்கும் பணியை மேற்கொண்டனர். மீட்பு பணியில் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின்புதான் தெரிந்தது மழைக்கு ஒதுங்கியபோது பாறை விழுந்து முருகன் இறந்தது. தொடர்ந்து முருகனை சடலமாக மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நேற்று மாலை பெய்த மழையால் வனப்பகுதியில் உள்ள வண்ணாம்பாறை என்ற இடத்தில் ஒதுங்கி உள்ளார். தொடர்ந்து ஆடு மேய்க்கச் சென்ற முருகன் வீடு திரும்பாத காரணத்தை அடுத்து அவரது உறவினர்கள் வண்ணாம்பாறை மற்றும் அவர் வழக்கமாக ஆடு மேய்க்கும் பகுதியில் தேடினர். அப்போது வண்ணாம்பாறை அருகே பாறை ஒன்று உருண்டு விழுந்து கிடந்தது.
எப்படிதான் இவங்களுக்கு மனசு வருதோ... பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய்!
சந்தேகமடைந்த உறவினர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ட்ரில்லிங் மிஷின் மூலமாக பாறையை உடைக்கும் பணியை மேற்கொண்டனர். மீட்பு பணியில் காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின்புதான் தெரிந்தது மழைக்கு ஒதுங்கியபோது பாறை விழுந்து முருகன் இறந்தது. தொடர்ந்து முருகனை சடலமாக மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.