ஆப்நகரம்

திமுக சொல்றது எல்லாம் கேட்கணும்னு அவசியமில்லை - எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடி!

திமுக கூட்டணியில் இருப்பதால் திமுக சொல்வதை அனைத்தையும் கேட்க வேண்டும் என்கிற அவசியமில்லை என மாணிக்கம் தாகூர் அதிரடி பேட்டியளித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 23 May 2022, 5:34 pm

ஹைலைட்ஸ்:

  • திமுக சொல்வதை அனைத்தையும் கேட்க வேண்டும் என்கிற அவசியமில்லை
  • பிரசாந்த் கிஷோர் காசு கொடுத்ததால் ஆலோசனை சொல்லும் ஆலோசகர்
  • எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடி பேட்டி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
விருதுநகரில் காங்கிரஸ் கட்சி எம்பி மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் உதய்பூரில் 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சியில் ஐந்து முக்கிய மாற்றங்கள் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
மேலும் பிரசாந்த் கிஷோர் சொல்வது மாற்றங்கள் இல்லை எனவும், பிரசாந்த் கிஷோர் காசு கொடுத்ததால் ஆலோசனை சொல்லும் ஆலோசகர் மட்டுமே எனவும், அவர் கூறும் ஆலோசனையை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது காசு கொடுக்கும் காங்கிரஸ் கட்சி தான் முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளார்.


மேலும் வாய்க்கு வந்ததை பேசுவது பிரசாந்த் கிஷோர் வழக்கமாக கொண்டு இருக்கிறார் என விமர்சனம் செய்தார். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க விட்டால் கோட்டையை முற்றுகையிடுவேன் என அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, தமிழக பிஜேபி கட்சியில் வெறும்18 நபர்கள் இருக்கின்றனர் எனவும், அண்ணாமலை முற்றுகை போராட்டம் என சீன் போடுகிறார் என விமர்சனம் செய்தார்.

மேலும் 2014 ஆம் ஆண்டு இருந்த பெட்ரோல், டீசல் விலை அளவுக்கு மத்திய அரசு குறைக்க வேண்டும் எனவும், அப்படி பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வர விட்டால் தீ குளிப்பேன் என மோடியிடம் கூற அண்ணாமலை தயாரா என கேள்வி எழுப்பினார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தான் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை குறைத்துள்ளது என்றார். பேரறிவாளனின் விடுதலையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு எப்போதும் ஒரே நிலைப்பாடு தான் எனவும், ஆனால் பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவதும், அவரை ஒரு தியாகி போல அவரை கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.

இரண்டு வயது குழந்தை மீது ஏறிய குடிநீர் வாகனம்... சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

மேலும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகள் ஒவ்வொரு நிலைப்பாட்டில் உள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சி ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளனர். அதே போல் திமுக சொல்வதை ஏற்றுக் கொள்வது எங்கள் வேலை இல்லை எனவும், காங்கிரஸ் சொல்வதை ஏற்றுக் கொள்வது திமுகவின் வேலை இல்லை எனவும் தெரிவித்தார்.

சீமான் பாஜகவின் B அணி எனவும் பேரறிவாளனின் விடுதலை பாஜகவால் நடத்தப்படும் சதி எனவும் அதில் முக்கிய கதாபத்திரம் சீமான் தான் என்றார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி