ஆப்நகரம்

விருதுநகர் டூ ஒடிசா.... புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம்!!

ஒடிசாவை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 963 பேர், விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Samayam Tamil 15 Jun 2020, 12:10 am
நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, கொரோனா வைரஸ் தாக்கம் பரவலாக உள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
Samayam Tamil odisha


இதையடுத்து, பொதுமுடக்க தளர்வுக்கு பின்னர் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலன்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை மூன்று கட்டமாக 1,600 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் முலம் பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நான்காம் கட்டமாக விருதுநகர், திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 963 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

200 அடி ஆழ கிணற்றில் விழுந்த இளம்பெண்..! போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்

முன்னதாக அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களுக்கு தேவையான உணவு, கிருமி நாசினி, முகக் கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த தொழிலாளர்கள் அனைவரும் தென்மாவட்டங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளிலும், சாலையோர கடைகளிலும் பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி