ஆப்நகரம்

விருதுநகர் அருகே சோகம்: மின்னல் தாக்கி பால் வியாபாரி பரிதாபமாக உயிரிழப்பு!

விருதுநகர் அருகே மின்னல் தாக்கி பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 28 Apr 2023, 8:23 pm

ஹைலைட்ஸ்:

  • விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் மழை
  • மின்னல் தாக்கி பால் வியாபாரி உயிரிழப்பு
  • சூலக்கரை காவல்துறையினர் விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மின்னல் தாக்கி பால் வியாபாரி உயிரிழப்பு
மின்னல் தாக்கி பால் வியாபாரி உயிரிழப்பு
விருதுநகர் அருகே சூலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகன் ராஜபாண்டி (வயது 26 ) இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
பால் விற்பனை

இந்நிலையில் இவர் இன்று மாலை வழக்கம் போல் சூலக்கரையிலிருந்து மாத்தநாயக்கன்பட்டி பகுதிக்கு பால் விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார்.
விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து; உடல் கருகி பெண் ஒருவர் பலி!
திடீரென மின்னல் தாக்கியது

அப்பொழுது விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வந்த நிலையில், பால் வியாபாரத்துக்கு சென்ற ராஜபாண்டி மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜபாண்டி உயிரிழந்தார்.

காவல்துறை விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூலக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜபாண்டியன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சூலக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி