ஆப்நகரம்

முதியோர் உதவித்தொகை; அமைச்சர் பரபரப்பு உத்தரவு!

முதியோர் உதவித்தொகை தொடர்பாக அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை தமிழக வருவாய் துறை அமைச்சர் பிறப்பித்துள்ளார். இதை பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

Samayam Tamil 12 Jan 2022, 10:50 am
விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில கூட்டம் மற்றும் காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு காலண்டர் வெளியிட்டார்.
Samayam Tamil முதியோர்
முதியோர்



கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் பேசும்போது, ‘முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, திருமண பதிவுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கு வருபவரிடம் கனிவாகவும், பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்’ என்று பேசினார் .

மேலும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து அரசு பணியாளர்களின் சங்கங்களின் போராட்ட காலங்கள், பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வலியுறுத்த வேண்டும்.

முதல்வரை கவர்ந்த பரோட்டா; மதுரையில் போட்டாப் போட்டி!

உறுப்பினர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் அமைக்க சந்தா வசூல் செய்ய அதற்கென்று ஒரு குழு அமைக்க வேண்டும். விஏஓ பதவியினை மீண்டும் டெக்னிகல் பதவி என அறிவிக்க வேண்டும்.

விஏஓக்கள் சட்டம் ஒழுங்கு தொடர்பாக மற்றும் சான்றுகள் தொடர்பாக களப்பணி விசாரணைக்கு சென்று வருவதற்கு உதவியாக அரசு இருசக்கர வாகனம் மற்றும் எரிபொருள் செலவினம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி ஷாக்; அடுத்தடுத்து பேட் நியூஸ்!

இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜன் சேதுபதி தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட பத்திரிக்கை செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேப்போல் மாவட்ட அமைப்புச் செயலாளர் கருப்பசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பலவேசம், மாவட்ட இணைச் செயலாளர் கணேசன், ஹலிலூர் ரஹ்மான், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி