ஆப்நகரம்

100 நாள் வேலை: மத்திய அரசின் தவறான முடிவு; மாணிக்கம் தாகூர் காட்டம்!

மத்திய அரசின் தவறான கொள்கை முடிவால் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் பாதிப்படைந்து இருப்பதாக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 2 Jul 2022, 6:53 pm

ஹைலைட்ஸ்:

  • விருதுநகர் அருகே மருளூத்து கிராமத்தில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப்பணி
  • விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு
  • பின்தங்கிய மாவட்டங்களில் MSME-ல் சிறந்து விளங்கியதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு விருது கிடைத்தது பெருமை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகள்) விருது பெற்றது பாராட்டுக்குறியது என மத்திய அரசு திட்டங்களை ஆய்வு செய்தபின் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டியளித்துள்ளார்.
விருதுநகர் அருகே மருளூத்து கிராமத்தில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப்பணியின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்து அத்தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மத்திய அரசு திட்டங்களில் ஒன்றான ஸ்மார்ட் வகுப்பு திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், மத்திய அரசின் தவறான கொள்கை முடிவால் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் பாதிப்படைந்து இருப்பதாகவும், வருகை பதிவேடு காலையில் விரைவாக எடுக்கப்படுவதால் பெண்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் வருகை பதிவேடு ஒரு மணி நேரம் தாமதமாக எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பின்தங்கிய மாவட்டங்களில் MSME-ல் சிறந்து விளங்கியதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு விருது கிடைத்தது பெருமை எனவும் இதற்காக பாடுபட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய தொழிலான தீப்பெட்டி, பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சனைகள் குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் எனவும், சிபிஐ என்பது தற்போது பாஜகவின் கை பாவையாக செயல்பட்டு வருவதாகவும், சிபிஐ உண்மையான குற்றவாளியை தேடுவதாக கூறி சாதாரண தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்களை கொடுமைப்படுத்துவதாகவும், பாஜகவிற்கு பட்டாசு உரிமையாளர்கள் பணம் வழங்காததன் காரணமாகவே இந்த சிபிஐ ரெய்டு நடப்பதாக குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வது அதிர்ச்சி அளிப்பதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயகமாக செயல்பட வேண்டும் எனவும், ஜிஎஸ்டியில் உள்ள குறைகளை தீர்க்க மாநில ஜிஎஸ்டி தீர்ப்பாயம் கொண்டுவரப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் முடிவை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

காணாமல் போகும் திமுக அரசு?; திருமாவை இழுத்து இந்து முன்னணி வம்பு!

மேலும் மகாராஷ்டிராவில் பாஜக தனது அரசை கொண்டுவர முயற்சிகளை செய்து வந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு ஏக் நாத் ஷண்டே துரோகத்தால் நடந்துள்ளது. இது 11 வது மாநிலமாக பாஜகவின் சூழ்ச்சியால் ஆட்சி மாறுகிறது. எந்த மாநில மக்கள் எதை எதிர்த்து வாக்களித்தார்களோ அதை பணத்தாலும் சிபிஐயாளும் பாஜக 11-வது மாநிலமாக மகாராஷ்டிராவில் ஆட்சியை மாற்றி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்றும், இந்திய ஜனநாயகத்திற்கு அரங்கேறியுள்ள மிகப்பெரிய அவமானம் என கூறினார்.

பின்பு தம்மநாயக்கன்பட்டி ஊராட்சி, இனாம் ரெட்டியாபட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை செய்யும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது சிவஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி