ஆப்நகரம்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி: ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன் உள்ளிட்ட 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு ராதிகா சரத்குமார், விஜயபிரபாகரன் மற்றும் டெல்லி மோடி அணி சார்பில் மனு தாக்கல் செய்த வேதா தாமோதரன் உட்பட 27 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Curated byஅன்னபூரணி L | Samayam Tamil 28 Mar 2024, 7:28 pm
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி:
Samayam Tamil ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன் உள்ளிட்ட 27 பேரின் வேட்பு மனு தாக்கல் ஏற்பு
ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன் உள்ளிட்ட 27 பேரின் வேட்பு மனு தாக்கல் ஏற்பு


தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி துவங்கிய நிலையில் தாக்கல் நேற்று 27ஆம் தேதி நிறைவடைந்தது. விருதுநகர் நாடாளுமன்ற பொது தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு 34 வேட்பாளர்கள் 41 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் தலைமையில் இன்று நடைபெற்றது.


விருதுநகர் வேட்பாளர்கள்:

இதில் பாஜக சார்பாக போட்டியிடும் ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கௌஷிக் மற்றும் டெல்லி பாஜக மோடி அணி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த வேதா தாமோதரன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேண்டும் என கேட்ட கரும்புச் சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த அசோக் குமார் உட்பட 27 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகர் சரத்குமார் மனு உட்பட 14 மனுக்கள் நிராகரிப்பு:

கரும்புச் சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி வேட்பாளர் மற்றும் அவருக்கு ஆதரவாக யாரும் வேட்பு மனு பரிசீலனையில் கலந்து கொள்ளாத நிலையில் அவருடைய வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பாஜக சார்பில் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்த நடிகர் சரத்குமார் மனு உட்பட 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
எழுத்தாளர் பற்றி
அன்னபூரணி L
அன்னபூரணி: ஆங்கில இலக்கியம் மற்றும் ஊடகவியல் துறை பட்டதாரி. அரசியல், கிரைம், சினிமா, பொது செய்திகள், ஆன்மீக செய்திகளில் ஆர்வம் அதிகம். எழுதுவதிலும், புத்தகம் வாசிப்பதிலும் அலாதி பிரியம் உண்டு. ஒரு பயிற்சியாளராக சமயம் தமிழில் எனது முதல் பயணத்தை தொடங்கி, தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக மாவட்ட செய்திகளை எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி