ஆப்நகரம்

தொழிலதிபரைக் கட்டிப்போட்டு 80 பவுன் தங்கம் விருதுநகரில் கொள்ளை!

ராஜபாளையத்தில் பட்டப்பகலில் தொழிலதிபரைக் கட்டிப்போட்டு விட்டு 80 பவுன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Apr 2021, 8:55 am
மாஸ்க் அணிந்து வந்த ஐந்து நபர்கள் துணிகரமாகத் தொழிலதிபரைக் கட்டிப்போட்டு 80 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil தொழிலதிபரைக் கட்டிப்போட்டு 80 பவுன் தங்கம் விருதுநகரில் கொள்ளை!


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பிஎஸ்கே நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி ராஜா மகன் நாராயண ராஜா. இவரது மனைவி ஜமுனா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இருவரும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.

நாராயண ராஜா பிஎஸ்கே நகரில் உள்ள வீட்டில் அவரது மனைவி ஜமுனாவுடன், தனியாக வசித்து வருகின்றனர். இவர் சங்கரன்கோவில் பகுதியில் உரக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவர்கள் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து திருட முயன்றுள்ளனர். வயதான தம்பதிகள் இருவரையும் கட்டிப் போட்டுவிட்டு அவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி, பீரோவில் நகை பணம் எங்கு உள்ளது எனக் கேட்டு 80 பவுன் தங்க நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை 5 பேர் திருடிச் சென்றுள்ளனர்.

ஏலியன் கொரோனா: உச்சக்கட்ட பீதியில் விருதுநகர் மக்கள்!

இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து வயதான தம்பதியை மீட்டுக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருட்டு நடைபெற்ற வீட்டில் சிசிடிவி கேமரா இல்லை. இதனால் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயதான தம்பதியைக் கட்டிப்போட்டுக் கொள்ளையடித்த சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி