ஆப்நகரம்

அரசு மருத்துவமனையில் மின்தடை: செல்ஃபோன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை!!

ராஜபாளையத்தில் இடி தாக்கியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Samayam Tamil 29 Apr 2020, 12:01 am
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன்கூடிய கனமழை பெய்தது. அப்போது ஆவரம்பட்டி பகுதியில் வயல்வெளிப் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க நண்பர்கள் இருவர் சென்றுள்ளனர்.
Samayam Tamil rajapalayam


அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமான இடி விழுந்தது. இதில் முனீஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் சென்ற மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புயல் அடித்தால் மரங்கள் சாயும்; பிரச்னைன்னு வந்தா பாதிப்பு வரும் : கொரோனா தத்துவம் பேசும் அமைச்சர்!!

மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டதால், மருத்துவர்களும், செவிலியர்களும் செல்போன் லைட் மூலம் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி