ஆப்நகரம்

பிசிஆர் வழக்கில் 6 அதிகாரிகள்; பொதுப்பணி துறையில் பரபரப்பு!

முக்கிய அதிகாரிகள் 6 பேர் மீது பிசிஆர் வழக்கு பாய்ந்து இருப்பது பொதுப்பணித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 29 May 2022, 4:02 pm
விருதுநகர்-மதுரை சாலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவியாளராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன் (48). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
Samayam Tamil பொதுப்பணித்துறை அலுவலகம்
பொதுப்பணித்துறை அலுவலகம்


அதே அலுவலகத்தில், சூப்பிரண்டாக பணிபுரிந்து வருபவர் இளங்கோவன். இவர், மாரியப்பன் தண்ணீர் குடிக்கச் சென்ற போது, சாதியை சொல்லி திட்டியதோடு குவளையை பறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அங்கு பணிபுரியும் கதிரேசன் என்பவர் மூலம் தேநீரில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விடுவதாகவும், சைகை மூலம் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.


மேலும், சூப்பிரண்டு இளங்கோவனின் தூண்டுதலின் பேரில் அங்கு பணிபுரிந்து வரும் கணேஷ் முனியராஜ் மற்றும் ராஜேஸ் ஆகியோர் மாரியப்பன் இயற்கை உபாதையை கழிக்கச் செல்ல முடியாதபடி கழிவறையை பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஒரே அணியில் பாமக, விசிக?; திருமாவளவன் திடீர் அழைப்பு!

மேலும், ‘பட்டியல் இனத்தவர் இந்தக் கழிப்பறையை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் உனது சிறுநீர் குழாயை அறுத்து வீடுவோம் ’ என மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அதே அலுவலகத்தில் பணியாற்றும் முத்துமுருகானந்தம் என்பவர் மாரியப்பனை அலுவலகக் கனிப்பொறியை பயன்படுத்த விடாமல் தடுத்ததோடு ‘பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன் தொடும் கனிப்பொறியை நாங்கள் எப்படி தொடுவது?’ என்று கூறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் கணக்கு அதிகாரியான தர்மேந்திரா யாதவ் என்பவர், ஹிந்தியில் சாதியைச் சொல்லி திட்டியதோடு ‘உத்திரப்பிரதேசமா இருந்தா, உன்னைப் போன்றவர்களை வேலைக்கு வைத்திருக்க மாட்டோம். அடித்து விரட்டிவிடுவோம்.

அனல் கக்கிய திருமாவளவன்; அதிர்ச்சியில் உறைந்த பாஜக!

வேனும்னா வீடியோவைப் பார்க்கிறாயா?’ என மிரட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த உதவியாளர் மாரியப்பன் இதுகுறித்து விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் பொதுப்பணித்துறை கணக்கு அதிகாரி, சூப்பிரண்டு உட்பட 6 பேர் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி