ஆப்நகரம்

குடிக்கத் தண்ணீர் இல்லை... காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்

தற்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

Samayam Tamil 22 Nov 2020, 5:24 pm
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குடிநீர் கேட்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Samayam Tamil குடங்களுடன் போராட்டம்


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெரு பகுதிக்கு மேட்டமலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

அவ்வாறு விநியோகம் செய்தாலும் குறைந்த அளவு அல்லது சுகாதாரமற்ற முறையில் விநியோகம் செய்யபடுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் குடிநீர் பிரச்சனை குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம பெண்கள் ஏராளமானோர் காலி குடங்களுடன் சாத்தூர்-சிவகாசி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் நகர் காவல் துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

குழந்தைத் திருமணம்... தமிழகத்தில் அதிகரிக்கும் தலைவலி

பேச்சுவார்த்தையில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக சாத்தூர்- சிவகாசி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடுத்த செய்தி