ஆப்நகரம்

பிரதமர் மோடி தந்த விருது; விருதுநகர் மக்கள் ஹேப்பி!

விருதுநகர் மாவட்டத்துக்கு பிரதமர் மோடி தந்துள்ள விருது பொதுமக்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 30 Jun 2022, 6:00 pm
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து அதிலிருந்து 112 பின்தங்கிய பகுதிகள் கொண்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
Samayam Tamil கலெக்டரிடம் விருது வழங்கும் பிரதமர்
கலெக்டரிடம் விருது வழங்கும் பிரதமர்


இதன் பின்னர் இந்த மாவட்டங்களை முன்னேற்றும் விதமாக இந்திய பிரதமர் மோடியால் ஜனவரி-2018ம் ஆண்டு முன்னேற விழையும் மாவட்டத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த 112 மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டமும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது. இதற்காக சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்து, கல்வி,வேளாண்மை மற்றும் நீர் வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதி சேவைகள் மற்றும் திறன் வளர்ப்பு, சாலை, குடிநீர், ஊரக மின் வசதி தனிநபர் இல்ல கழிப்பறை வசதி உள்பட அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்த காரணிகள் அடிப்படையாக உள்ளன.

அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கம்; தலைமைக்கழகம் பெயரில் போஸ்டர்!

இந்நிலையில் இந்திய அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் தேசிய MSME விருதுகள்-2022 க்கான விருதுகள் பிரிவில் முதல் பரிசுக்காக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

MSME துறையின் மேம்பாடு மற்றும் மேம்பாட்டில் சிறந்த பங்களிப்பிற்கான ஆர்வமுள்ள மாவட்டங்கள். "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் 75வது ஆண்டை" கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முன்னேற விளையும் மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.

தமிழக எம்எல்ஏக்கள் பேரம்?; இந்து முன்னணி புது குண்டு!

இந்நிலையில் இன்று விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத ரெட்டியிடம் பிரதமர் நரேந்திரமோடி விருது வழங்கினார்.

அடுத்த செய்தி