ஆப்நகரம்

குடியரசு தின கொண்டாட்டம்: போலீஸ் பிடியில் ரயில் நிலையம்!

குடியரசு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு.

Samayam Tamil 25 Jan 2022, 4:44 pm

ஹைலைட்ஸ்:

  • இந்தியா முழுவதும் நாளை குடியரசு தின விழா
  • ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு
  • இரயில் நிலையம் மற்றும் முக்கிய ரயில் பாதைகளில் காவல்துறையினர் தீவிர சோதனை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இருப்புப் பாதைகள் மற்றும் ரயில்களில் பயணிகளின் உடமைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தன்று எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் கோவில்கள், பேருந்து நிலையங்கள் என பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக விருதுநகர் இரயில் நிலையம் மற்றும் முக்கிய ரயில் பாதைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே காவல் ஆய்வாளர் பிரியா மோகன் தலைமையில், விருதுநகர் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்த பயணிகளின் உடமைகளை பரிசோதித்த பின்பே அனுமதிக்கப்பட்டனர்.
சசிகலா விட்ட தூது; ராஜேந்திர பாலாஜி எடுத்த அதிரடி முடிவு!

அதைத்தொடர்ந்து பயணிகளை பரிசோதனை செய்த பிறகே, ரயிலில் ஏற காவல் துறையினர் அனுமதிக்கின்றனர்.

அடுத்த செய்தி