ஆப்நகரம்

பெயிலில் வெளியே வந்த திமுக பிரபலம் கோயில் வாசலில் கொலை: விருதுநகர் சம்பவம்!

ராஜபாளையம் அருகே சேத்தூர் கரையடி விநாயகர் கோயில் பகுதியில் முன்விரோதம் காரணமாக திமுக 13ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன் வெட்டிப்படு கொலை செய்யப்பட்டார்.

Samayam Tamil 14 Apr 2021, 7:13 pm
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அம்மையப்பன் மகன் அண்ணாமலை ஈஸ்வரன்(45) திமுக 13ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர்.
Samayam Tamil பெயிலில் வெளியே வந்த திமுக பிரபலம் கோயில் வாசலில் கொலை: விருதுநகர் சம்பவம்!


கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த வருடம் இதே மாதம் நடந்த கபடிப் போட்டியில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக முதல் குற்றவாளியாகக் காவல் துறையினரால் அண்ணாமலை ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். இவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின் அண்ணாமலை ஈஸ்வரன் கடந்த 6 மாதத்திற்கு முன் ஜாமினில் வெளியே வந்தார். இந்த சூழலில், அண்ணாமலை ஈஸ்வரன் சேத்தூர் கரையடி விநாயகர் கோயிலுக்குத் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சாமி கும்பிட சென்றிருந்தார்.

அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகம் கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலே பலியானார்.

ஒரு நிலம்... 50 பேர்... பெண் உள்பட கும்பல் கைது!

தகவலறிந்து விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான போலீசார் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் பழிக்குப்பழியாக நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதும் முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்டதா என சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய கொலைக் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் பதட்டமான சூழ்நிலை நிலவுகின்றது.

அடுத்த செய்தி