ஆப்நகரம்

35 முதல் 45 வயதினர் 10 பேர் அடுத்தடுத்​து மர்மச் சாவு: விருதுநகர் கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம்!

சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் அடுத்தடுத்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து மர்மமான முறையில் பொதுமக்கள் செத்து மடிந்துள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 6 May 2021, 11:05 pm
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார் பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரக் காலத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சுகாதாரத் துறையினர் குறிப்பிட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil 35 முதல் 45 வயதினர் 10 பேர் அடுத்தடுத்​து மர்மச் சாவு: விருதுநகர் கிராமத்தில் அதிர்ச்சி சம்பவம்!


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சல்வார்பட்டி கிராமத்தில் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலோனோர் விவசாயம் மற்றும் பட்டாசுத் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.

இந்த சூழலில் சல்வார்பட்டி பகுதியில் கடந்த ஒரு வாரக் காலமாக 35 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் லாரி கவிழ்ந்து 6 டயர்கள் கழன்று ஓடி பெரும் விபத்து!

இதனை அடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறையினர் சல்வார்பட்டி கிராமத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அந்தப் பகுதி முழுவதையும் கிருமி நாசினி தெளித்து தெருக்களைத் தூய்மைப்படுத்தி மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். எனினும் தொடர் உயிரிழப்பு மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உளவியல் ரீதியாக இந்தப் பகுதி மக்களுக்கு அரசு ஆலோசனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அடுத்த செய்தி