ஆப்நகரம்

மாமியாரை கொலை செய்த மருமகன்: வக்கீல் நோட்டீஸ்தான் காரணமா?

சாத்தூரில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டையை சமாதானம் செய்ய வந்த மாமியாரை குத்திக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 24 Jun 2021, 10:19 am
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணாநகரில் வசித்து வருபவர் சங்கரநாரயணன். இவர் மகள் முனீஸ்வரி(25). இவர் வெம்பக்கோட்டை அருகே கட்டணச்செவல் கிராமத்தை சேர்ந்த ராம்குமாரை(27) 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
Samayam Tamil மாமியாரை கொலை செய்த மருமகன்: வக்கீல் நோட்டீஸ்தான் காரண்மா?


ராம்குமார் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே சண்டை என்பது வாடிக்கையாக இருந்து வந்ததுள்ளது. இதனால் முனீஸ்வரி ராம்குமாரை பிரிந்து கடந்த 6 மாதங்களாக வாழ்ந்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் முனீஸ்வரி சில நாட்களுக்கு முன்பு ராம்குமாரிடம் விவகாரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த ராம்குமார் சாத்தூர் அண்ணாநகரில் உள்ள அப்பா வீட்டிலிருந்த மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையை அருகிலிருந்த முனீஸ்வரியின் சித்தி மாரியம்மாள்(55) விலக்கியுள்ளார். அப்போது தான் வைத்திருந்த கத்தியால் ராம்குமார் மாரியம்மாளை குத்தியுள்ளார்.

இதில் மாரியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் நகர் காவல் துறையினர் உயிரிழந்த மாரியம்மாளின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த முனீஸ்வரி (25) அவருடைய அம்மா சந்திரா (58) சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளி ராம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி