ஆப்நகரம்

கனமழையால் கடும் சேதம்...உடனே ஓடிவந்த எம்.எல்.ஏவுக்கு மக்கள் பாராட்டு!

சாத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்.எல்.ஏ ராஜவர்மன் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

Samayam Tamil 27 May 2020, 11:24 pm
சாத்தூர் அருகே மழையில் சேதமடைந்த வீடுகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
Samayam Tamil சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன்


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் சாத்தூர்அருகிலுள்ள ஸ்ரீரங்கபுரம், நடுச்சூங்குடி, கோட்டைப்பட்டி, வெம்பக்கோட்டை ஆகிய கிராமங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் மரங்களின் கிளைகள் முறிந்து வீடுகளின் மேல் விழுந்தன. மேலும் கிளைகள் விழுந்ததில் பல மின் இணைப்புகள் அறுந்து விழுந்துள்ளன.

சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள், தாழ்வாரங்கள், கடைகள், மாட்டுத்தொழுவங்கள் ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன. வீடுகளில் தஞ்சம் புகுந்த மக்கள் சிலர் மீது காற்றில் பறந்து வந்த ஓடு விழுந்து பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலறிந்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டு சோகத்தில் இருந்த மக்களுக்கு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கினார். மேலும் பாதிப்படைந்த அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்களுக்கு அவர் உறுதியளித்தார்.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பட்டாசு தொழிற்சாலைகளையும், கூலி வேலையையும் நம்பி் இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் கனமழையால் செய்வதறியாது திகைத்து நின்ற மக்களுக்கு, பாதிக்கப்பட்ட உடனே ஓடிவந்து ஆறுதல் கூறிய சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் மனதார பாராட்டினர்.

அடுத்த செய்தி