ஆப்நகரம்

எத்தனை நாட்கள் கனமழையால் பள்ளிகள் விடுமுறை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவை பிறபித்து உள்ளார்.

Samayam Tamil 29 Nov 2021, 9:32 am
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை தனித் தீவாக மாற்றும் வகையில் இந்த வருட வடகிழக்கு பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது. இது பருவ மழை என்பதால் அரசு அதிகாரிகளின் அலெட்சியமான பணிக்காரணமாகவே இப்படி வெள்ள நீர் ஊரை சூழ்ந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
Samayam Tamil எத்தனை நாட்கள் கனமழையால் பள்ளிகள் விடுமுறை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!


இப்படியான நிர்வாகத்தினால் சிதைந்து கிடக்கும் விருதுநகர் மாவட்டத்தில் கன மழை காரணமாக மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கன மழைக்கு இடையே பள்ளி கல்லூரி மாணவர்கள் சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு ஒரு நாள் இன்று விடுமுறை அளித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
கலெக்டர் நச் பதில்; விடுமுறை கேட்ட மாணவன் கப்சிப்!
மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு நேற்று முதல் வரத் தொடன்கியது. இந்தச் சூழலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பை இன்று காலை வெளியிட்டு உள்ளார்.

அதேவேளை கனமழை எச்சரிக்கை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் மிகவும் எச்சரிக்கையோடு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த கனமழை காலத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிகளவில் வீட்டில் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொண்டு, முடிந்தளவு வெளியே செல்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அடுத்த செய்தி