ஆப்நகரம்

சிவகாசியில் மேலும் ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்து 6 பேர் பலி

சிவகாசி காளயார் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டு 6 பேர் பலியானதுடன் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 25 Feb 2021, 8:57 pm
சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தங்கராஜ் பாண்டியன் பட்டாசு ஆலையில் இன்று மாலை பேன்ஸி ரக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
Samayam Tamil firework accident


இதில் 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது.இந்த வெடிவிபத்தில் 6பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 14 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 80℅ தீ காயத்துடன் இரண்டுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.தீயை கட்டுப்படுத்த 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து புதுப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி