ஆப்நகரம்

கொரோனா களப்பணியாளராக மாறிய மென்பொறியாளர்!!

திராட்சை தோட்டங்களில் ம௫ந்து தெளிக்க பயன்படுத்தும் நவீன விவசாய இயந்திரத்தை கொண்டு, கிராமங்கள்தோறும் இலவசமாக கி௫மி நாசினி தெளித்துவரும் மென்பொறியாளர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Samayam Tamil 9 Jun 2020, 11:29 pm
வி௫துநகர் மாவட்டம், காரியாபட்டி அ௫கே உள்ள மேலத்துலுக்கன் குளத்தை சேர்ந்தவர் மென்பொறியாளர் கிருஷ்ணகுமார். பெங்களூருவில் பணிபுரிந்துவரும் இவர், தற்போது அலுவலகம் செயல்படாமல் உள்ளதால் தனது சொந்த கிராமத்தில் இருந்தே அலுவலக பணியாற்றி வருகிறார்.
Samayam Tamil software eng


மேலும் விவசாய பின்னணி கொண்டவரான இவர் கொரோனா தடைக்காலத்தில் டாபே டிராக்டர் நிறுவனத்துடன் இணைந்து 3 ஆயிரம் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவை இலவசமாக உழவு செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், தனது கிராம மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தென்கொரியா மற்றும் பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் திராட்சை தோட்டங்களில் மருந்து தெளிக்க பயன்படுத்தும் நவீன இயந்திரத்தை கொண்டு, ஊராட்சிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து வ௫கிறார்.

அடக் கொடுமையே... புதுமண தம்பதியை பிரித்த கொரோனா!!

பேராலி, மல்லாங்கிணறு, துலுக்கன் குளம், கல்குறிச்சி என 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இப்பணியை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து கிருஷ்ணகுமார் கூறும்போது, "எங்கள் கிராமங்களில் கொரோனா தொற்று இல்லை என்றாலும், "வ௫ம்முன் காப்போம்" என்பதை போல் நவீன இயந்திரம் கொண்டு கி௫மி நாசினி தெளித்து வ௫வதாகவும், இதற்கு டாபே டிராக்டர் நிறுவனம் உதவி செய்து வ௫வதாகவும் அவர் தெரிவித்தார்.

“மக்களே, ஆலோசனை சொல்லுங்க” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...

அத்துடன், ம௫ந்து தவிர மற்ற செலவுகளுக்கு நண்பர்கள் மூலம் பணத்தை திரட்டியுள்ளேன்" என்றும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி