ஆப்நகரம்

ஊருக்குள் நுழைந்ததா புலி?; வீடியோவால் மக்கள் அச்சம்!

ஊருக்குள் புலி உலவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக வன அதிகாரி பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 28 Oct 2021, 12:09 pm
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செண்பகத்தோப்பு பகுதி அமைந்துள்ளது. இதை சுற்றி மா விவசாயம், தென்னை விவசாயம், கொய்யா விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil சாலையை கடக்கும் புலி
சாலையை கடக்கும் புலி


இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, கரடி, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு அடிவாரப் பகுதியில் புலி ஒன்று உலா வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் விவசாய பணிக்கு செல்லும் விவசாயிகள் அச்சமடைந்தனர். புலி ஒன்று நடமாடும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வனத்துறை அதிகாரிகள் இதுபோல் புலி நடமாடுவது செண்பகத்தோப்பு பகுதி இல்லை என்றும், வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கமளித்துள்ளார்.

தெரியாமல் பேசுகிற முட்டாள்கள்; தெறிக்கவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி