ஆப்நகரம்

சரக்கு விற்பனையில் புது வரலாறு: ரூ. 5 லட்சம் பாட்டில்கள் தென்னந்தோப்பில் பதுக்கி விற்பனை!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே முறைகேடாகப் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 16 May 2021, 5:43 pm
ஸ்ரீவில்லிப்புத்தூரில் முறைகேடாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 5 ஆயிரத்து 256 மது பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது.
Samayam Tamil சரக்கு விற்பனையில் புது வரலாறு: ரூ. 5 லட்சம் பாட்டில்கள் தென்னந்தோப்பில் பதுக்கி விற்பனை!


இந்த சூழலில் நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பார்வையாளராகப் பணி புரிந்து வருபவர் சிவசுப்பிரமணியன். இவர்தான் வேலைபார்க்கும் கடையிலிருந்து மது பாட்டில்களை பதுக்கி வைத்து மகாராஜபுரத்தில் உள்ள தென்னந்தோப்பில் அதனை முறைகேடாக விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஊரடங்கிலும் அடங்காத வாகன ஓட்டிகள்... அடக்கிய சாத்தூர் போலீஸ்!

இதனையடுத்து மதுவிலக்கு டிஎஸ்பி இமானுவேல் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது அங்கு தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 992 குவார்ட்டர் பாட்டில்கள், 264 ஹாஃப் பாட்டில்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 256 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் மதுபான கடையின் மேற்பார்வையாளர் சிவசுப்பிரமணியன் தலைமறைவாகியுள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி