ஆப்நகரம்

சுப்ரீம் கோர்ட்டை மதிக்காத தமிழக அரசு; சடகோப ராமானுஜ ஜீயர் கடும் கண்டனம்!

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் முடிவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உச்சநீதி மன்ற தீர்ப்பை தமிழக அரசு மீறியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 21 Aug 2021, 3:10 pm
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு அறிவித்து அதற்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கியுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு, பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil சடகோப ராமானுஜ ஜீயர்
சடகோப ராமானுஜ ஜீயர்


ஆனால் பாஜக, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் தமிழக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஆகம விதிப்படி தான் கோயில்களில் பூஜைகள் நடக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர், ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் உள்ள மனவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீஸ்ரீஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் தமிழக அரசை வன்மையாக கண்டித்து உள்ளார்.

வாராந்திர ரயில்கள் சேவை மாற்றம்; 5 மணி நேரம் தாமதம் என அறிவிப்பு!

இதுகுறித்து சடகோப ராமானுஜ ஜீயர் vஎளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தெரிவித்துள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பாரம்பரியமாக இருக்கக்கூடிய அனைத்து கோயில்களிலும் ஆகம முறைப்படி தான் பூஜைகள் நடக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் நடைமுறைகளை மாற்ற உரிமை கிடையாது. இது, உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் உள்ளது. அதனை மீறி தமிழக அரசு அறிவித்து இருப்பது நல்லது இல்லை.

முடிஞ்சா ஒரு செங்கல் வை; பிரேமலதா விஜயகாந்த் சவால்!

நம் பாரம்பரிய சம்பிரதாயத்தை தமிழக அரசு மாற்றுகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை உடனடியாக தமிழக அரசு நீக்க வேண்டும். மேலும், பாரம்பரியம் மாறாமல் தமிழகத்தில் எப்போதும்போல் பூஜை நடக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு போடுவார் என, நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி