ஆப்நகரம்

விதி மீறிய ‘அதிரடி’ அமைச்சர்; மக்கள் அச்சம்!

விருதுநகரில் கொரோனா விதி மீறி கபசுர குடிநீர் கொடுத்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 25 Apr 2021, 9:12 am
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில், அதிமுக கட்சி சார்பில் கொரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது,
Samayam Tamil அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


அதன்படி விருதுநகர் நகர அதிமுக சார்பில் விருதுநகர் வெயிலுக்குகந்த மாரியம்மன் கோவில் முன்பு அதிமுக விருதுநகர் மாவட்டச் செயலாளர் தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பொதுமக்களுக்கு கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கினார்.

கட்சிக்காரர்களை களையெடுக்கப் போகிறேன் - அதிரவைத்த கமல் ஹாசன்!

மேலும் வெயிலுக்கு உகந்த தண்ணீர் பழம் அண்ணாசிபழம் உள்ளிட்டவற்றையும் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்சியை விருதுநகர் நகர அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆனால் பலர் முகக்கவசம் அணியாமலும், முறையான சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முண்டியடித்துக் கொண்டு செயல்பட்ட விதம் பொதுமக்களை அச்சப்பட வைத்தது.

கொரோனாவை தடுக்க கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனால் கொரோனா பரவி விடுமோ என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி