விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (59). இவர் பிரின்டிங் பிரஸ் வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி நித்யா தேவி (56), மகள் மலையரசி (27) மலையரசியின் குழந்தைகள் சிவகுரு (4), குருதேவ் (2) ஆகியோருடன் சேர்ந்து காரில் விளாத்திகுளத்தில் உள்ள தனது மகன் அண்ணாமலை மற்றும் மருமகள் சிந்தியாவை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த காரை சிவகாசியை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றார். குடும்பத்துடன் சென்று மகன் மற்றும் மருமகளை பார்த்துவிட்டு மீண்டும் சுப்ரமணியன் குடும்பத்தாருடன் வீடு திரும்பி உள்ளார். அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலை வேலாயுதபுரம் விளக்கில் மீன் ஏற்றுவதற்காக மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் அந்த சரக்கு வாகனம் திடீரென தடுமாறி மறுபக்கம் சாலையில் பாய்ந்து சுப்பிரமணியன் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் காரில் பயணம் செய்த வித்யா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் கார் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியாக சென்ற மக்கள் விரைந்து பந்தல்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கார் ஓட்டுநர் சூரிய பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் விபத்து குறித்து பந்தல்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சகாய சுந்தர் (46) மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
மகனையும் மகளையும் பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது கார் விபத்துக்குள்ளாகி இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அந்த காரை சிவகாசியை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றார். குடும்பத்துடன் சென்று மகன் மற்றும் மருமகளை பார்த்துவிட்டு மீண்டும் சுப்ரமணியன் குடும்பத்தாருடன் வீடு திரும்பி உள்ளார். அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலை வேலாயுதபுரம் விளக்கில் மீன் ஏற்றுவதற்காக மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கி சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில் அந்த சரக்கு வாகனம் திடீரென தடுமாறி மறுபக்கம் சாலையில் பாய்ந்து சுப்பிரமணியன் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் காரில் பயணம் செய்த வித்யா தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் கார் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியாக சென்ற மக்கள் விரைந்து பந்தல்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கார் ஓட்டுநர் சூரிய பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் விபத்து குறித்து பந்தல்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சகாய சுந்தர் (46) மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
மகனையும் மகளையும் பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது கார் விபத்துக்குள்ளாகி இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.