ஆப்நகரம்

கோயில் குளத்தில் கேட்ட குரல்; பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு!

கோயில் குளத்திற்குள் இருந்து வந்த குரலை கேட்டு ஆச்சரியப்பட்ட பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 23 Jan 2022, 7:11 pm
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 5 பேர் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். துக்க நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர்கள் அனைவரும் குளிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்திற்கு வந்துள்ளனர்.
Samayam Tamil கோயில் குளத்தில் சிக்கிய வாலிபர்கள்
கோயில் குளத்தில் சிக்கிய வாலிபர்கள்



பின்னர் அவர்கள் 5 பேரும் குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆர்வம் மிகுதியில் குளத்தின் மையத்தில் உள்ள ஆண்டாள் மண்டபத்திற்கு நீச்சல் அடித்து சென்றனர்.

உடைந்து போன உதயநிதி ஸ்டாலின்; வெற்றி தேடி தந்த தொண்டர் மறைவு!

அங்கு சிறிது நேரம் நின்ற அவர்கள் மீண்டும் கரைக்கு நீந்தி வர முடியாமல் தவித்தனர். இதற்கிடையே 3 பேர் மட்டும் நீச்சல் அடித்து வந்து விட்டனர். மற்ற 2 வாலிபர்கள் கரைக்கு நீந்தி வர முடியாமல் குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் தவித்து கொண்டிருந்தனர்.

வாண்டடா வண்டி ஏறிய ஜெயக்குமார்; வச்சி செய்ய..காத்திருக்கும் போலீசார்?

நேரம் செல்ல செல்ல குளத்திற்குள் இருந்தவர்கள் கரையில் இருப்பவர்களை நோக்கி கத்தி கூச்சலிட்டனர். திடீரென கோயில் குளத்திற்குள் இருந்து வந்த குரலை கேட்டு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்க ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பறந்து வந்த திடீர் உத்தரவு; பள்ளி ஆசிரியர்கள் ஷாக்!

பின்னர், இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர். உடனே தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி