ஆப்நகரம்

சட்டவிரோத பட்டாசு தயாரிப்பில் ஏற்பட்ட விபரீதம்; 2 இளைஞர்கள் பரிதாப பலி.. விருதுநகரில் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரித்தேவன்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது வெடி விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 3 Oct 2022, 12:08 pm

ஹைலைட்ஸ்:

  • விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பூசாரித்தேவன்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு
  • பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது வெடி விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி
  • புதுப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வெடி விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சட்ட விரோதமாக பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட பூசாரித்தேவன் பட்டி பகுதியில் தகர செட் அமைத்து அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் விபத்தில் நாகராஜ் (19), திருப்பதி (21) ஆகிய இருவரையும் பலத்த தீக்காயங்களுடன் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஹேப்பி நியூஸ்; விருதுநகர் கலெக்டர் அதிரடி!

தொடர்ந்து 80 சதவீத காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து புதுப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு இளைஞர்கள் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி