ஆப்நகரம்

தண்டவாளத்தில் சிதைந்த சடலம்... கொலையா தற்கொலையா?

ஏதும் விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 15 Nov 2020, 11:17 pm
விருதுநகரில் ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை
Samayam Tamil virudhunagar jn


விருதுநகரில் அருப்புக்கோட்டை செல்லும் மேம்பாலம் அடியில் உள்ள இரும்பு பாதையில் முகம் சிதைந்த நிலையில் இருப்பதாக ரயில்வே ஊழியர் பார்த்து உள்ளார். இதை தொடர்ந்து அவர் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த ரயில்வே காவல்துறையினர் கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் உடன் இணைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்

இறந்தவரின் உடல் சிதைக்கப்பட்டு இருப்பதால் அவர் ஒரு 36 வயது மதிக்கத்தக்க ஆண் என்பது மட்டுமே தெரிய வந்துள்ளது.

ஆனால், இறந்தவர் யார் என்பதோ தற்கொலை செய்து கொண்டாரா என்பதோ தெளிவாகத் தெரியவில்லை. இந்நிலையில், ஏதும் விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி