ஆப்நகரம்

விஜயதசமி: குழந்தைகளுடன் களைகட்டும் அரிச்சுவடி நிகழ்ச்சி

இதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்று அதிகாலை 6 மணி முதல் கலந்து கொண்டனர்

Samayam Tamil 26 Oct 2020, 10:56 am
இராஜபாளையம் சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அக்ஷராப்யாஸம் (எழுத்து பயிற்சி) நிகழ்ச்சி 100க்கும் மேற்பட்ட குழந்தை பங்கேற்றனர்.
Samayam Tamil அரிசியில் அரிச்சுவடி


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு சொக்கர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யா சரஸ்வதி முன்பாக அக்ஷராப்யாஸம் என்ற குழந்தைகளுக்கான முதல் எழுத்து பயிற்சி நடை பெற்றது. அதாவது விஜயதசமி அன்று குழந்தைகளின் கல்வியைத் ட்தொடங்குவதன் மூலம் கல்விக் கடவுளாக நம்பப்படும் சரஸ்வதியின் அருள் பெறலாம் என்பது நம்பிக்கை.

சரஸ்வதி பூஜைக்கு மறுநாளான விஜயதசமியான இன்று பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி வழங்கக்கூடிய இந்த எழுத்து பயிற்சி, சரஸ்வதி திரு உருவ சிலை முன்பு குழந்தைகள் மற்றும் அவர்கள் பெற்றோர் மடியில் அமரவைத்து நடைபெற்றது .

ஒரு மழைக்கே மூழ்கிருச்சு; அப்போ பருவமழைக்கு - மூச்சுத் திணறும் பெங்களூரு!

இதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இன்று அதிகாலை 6 மணி முதல் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு மந்திரங்கள் ஓதப்பட்டு அ முதல் ஃ வரை அரிசியில் எழுதவைத்து, எழுத்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.

அடுத்த செய்தி