ஆப்நகரம்

கம்பிக்குடியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா: 1440 ஏக்கர் பரப்பளவு கண்மாயில் மீன்களை அள்ளிய பொது மக்கள்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தில் 1440 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாயில் பிரம்மாண்டமான மீன்பிடித் திருவிழா பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டு மீன் பிடித்து வருகின்றனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 3 May 2022, 6:16 pm
அதிக பாசன நீர் நிலைகளை கொண்ட கம்பிக்குடி கண்மாயில் மீன்களை வளர்ப்பதும், நீர் வற்றியதும் மீன்களை பொதுமக்கள் பிடிப்பது என்பது காலங்காலமாக நடந்து வந்துள்ளது.
Samayam Tamil கம்பிக்குடியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா


அந்த வகையில் 12-ஆண்டுகளுக்கு பின்பு பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா இன்று காலை நடைபெற்றது. முதலில் கம்பிக்குடி கிராமத்தில் உள்ள வாழவந்த அம்மன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடி சாமி கும்பிட்டு பூஜை செய்து கண்மாயில் இறங்கினர்.

துணை முதல்வராக உதயநிதி: கோரிக்கை வைத்த முக்கிய புள்ளி!

சுமார் 1440 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான கம்பிக்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் நடைபெற்று வரும் இந்த மீன்பிடி திருவிழாவில் மந்திரிஓடை, சின்ன கம்பிக்குடி, பெரிய கம்பிக்குடி, ஆவியூர், ஆலங்குளம், அச்சங்குளம் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா, தூரி ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.

அதில் ஒவ்வொருத்தர் வலையிலும் 5 கிலோ முதல் 10 கிலோ வரை உள்ள நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால், தேன் கெழுத்தி ஆகிய மீன்கள் கிடைத்தன.
இதையடுத்து மீன்பிடித் திருவிழாவில் பிடிக்கப்பட்ட மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் சமைத்து உண்பது ஐதிகமாக உள்ளது. ஜாதி, மதம் பாராமல் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி நடத்திய இந்த மீன்பிடித் திருவிழா நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி