ஆப்நகரம்

விவசாயிகளுக்கு பணம்... இதை செய்தால் தான் பெறலாம்!

விவசாயிகள் இதை செய்தால் மட்டுமே பிரதமர் வழங்கும் ஊக்கத்தொகையை பெற முடியும் என கலெக்டர் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 19 Mar 2022, 9:45 pm
நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளில் நிதியுதவி வழங்கும் பிரதமர் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் 10வது தவணையை பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்டார்.
Samayam Tamil பிரதமர்
பிரதமர்


நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் முதல் பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் தலா 2,000 ரூபாய் வீதம் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை ரூ.1.60 லட்சம் கோடிக்கும் மேலாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ரேஷன் ஊழியர்கள் அதிர்ச்சி; பறந்து வந்தது திடீர் உத்தரவு!

பிரதமரின் இந்த விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ 6 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 80150 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற ஏப்ரல் 2022 முதல் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

பள்ளி ஆசிரியர்கள் ஹேப்பி; அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!

எனவே இந்த திட்டத்தில் பயனடைந்து வரும் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் அனைவரும், தங்களது வங்கிக்கணக்கு எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளதா? என சரிபார்க்க வேண்டும்.

ஆதார் எண்ணை வங்கிக்கணக்கு எண்ணுடன் இணைக்காத 16908 விவசாயிகள் உடனடியாக தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி