ஆப்நகரம்

கல்லூரி மாணவர்கள் ஹேப்பி; வெளியான சூப்பர் அறிவிப்பு!

கல்லூரி மாணவர்களுக்கு செம ஹேப்பியான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Samayam Tamil 24 May 2022, 10:32 pm
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
Samayam Tamil கல்லூரி மாணவர்கள் ஹேப்பி
கல்லூரி மாணவர்கள் ஹேப்பி


தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பிற்கிணங்க முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளான 03.06.2022 ஆம் நாள் முற்பகலில் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பெற உள்ளன.

இந்த பேச்சுப் போட்டிகளில் அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் / பொறியியல் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்கலாம்.

திமுகவுக்கு புதிய காலக்கெடு; மீண்டும் சீண்டும் பாஜக!

இந்த போட்டிகள் குறித்த விவரங்கள், கல்லூரிகளுக்கு, கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பப்படும். போட்டிக்கான தலைப்புகள், போட்டி நடைபெறும் நாளில் அறிவிக்கப்படும்.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- , இரண்டாம்பரிசு ரூ.3000/- , மூன்றாம் பரிசு ரூ.2000/- வீதம் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் ம.சுசிலா மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளார்.

அடுத்த செய்தி