ஆப்நகரம்

காந்தி ஜெயந்தி: விருதுநகரில் கிராம சபை கூட்டம்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

காந்தி ஜெயந்தி அன்று விருதுநகரில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 27 Sep 2022, 12:08 pm

ஹைலைட்ஸ்:

  • விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகள்
  • காந்தி ஜெயந்தி தினமான 02.10.2022 அன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும்
  • விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அறிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி
விருதுநகர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினமான 02.10.2022 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தினமான 02.10.2022 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. விவாதிக்கப்பட உள்ளவை கீழ்காணுமாறு:


"கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல்

கிராம ஊராட்சியின் தணிக்கை குறித்து விவாதித்தல்

ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து விவாதித்தல்

மகாளய அமாவாசைக்கு சதுரகிரியில் அலைமோதிய கூட்டம்; 2 பக்தர்கள் மூச்சு திணறி உயிரிழப்பு!

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் -ஐஐ குறித்து விவாதித்தல்

கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 மறு-கணக்கெடுப்பு குறித்து விவாதித்தல்

தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) குறித்து விவாதித்தல்

ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்

சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல் குறித்து விவாதித்தல்

பண்ணை சார்ந்த தொழில்கள் மற்றும் பண்ணைசாரா தொழில்கள் குறித்து விவாதித்தல்"

எனவே, 02.10.2022 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி