ஆப்நகரம்

ரேஷன் கடையில் இது வேண்டாம்; ஊழியர்களுக்கு பறந்தது உத்தரவு!

தமிழ்நாடு பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பணியாற்றும் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அதிரடியான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதை ரேஷன் கார்டுதாரர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

Samayam Tamil 13 Mar 2022, 11:01 am
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமானோருக்கு கைரேகை பதிவாகாததால் பொருட்கள் வழங்க முடியாது என, ரேஷன் ஊழியர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
Samayam Tamil ரேஷன் கடை
ரேஷன் கடை



குறிப்பாக, முதியோர் ஆதாரில் கைரேகை பதிவு செய்ய இ சேவை மையங்களூக்கு படையெடுக்கின்றனர். சில சமயங்களில் அங்கும் கைரேகை பதிவாகாததால் உணவு பொருள் வழங்கல் அலுவலரிடம் மனு செய்து சான்றிதழ் பெற்று வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தியேட்டருக்குள் புகுந்த பாமக; தெறித்து ஓடிய சூர்யா ரசிகர்கள்!
இவ்வாறு செல்லும்போது அலுவலர்களும் உடனடியாக வழங்காமல் அலைக்கழிக்க செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளிள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் பலரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உள்ள நியாய விலை கடைகளில் மின்னணு விற்பனை இயந்திரத்தில் (POS Machine) கைரேகை பதிவு முறை (Bio Metric) மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சி கலைப்பு?; புதிய வெடியை கொளுத்தும் பா.ஜ.க!
இவ்வாறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும்போது சில நேரங்களில் மின்னணு விற்பனை இயந்திரந்தில் கைரேகை பதிவு செய்வதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விநியோகம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு முறை செயல்படுத்த இயலாத சூழலில் குடும்ப அட்டை குறியீட்டு எண்ணை மின்னணு விற்பனை இயந்திரத்தில் ஸ்கேன் செய்வது மற்றும் குடும்ப அட்டை எண்ணை விற்பனை இயந்திரத்தில் உள்ளீடு செய்து அதன்படி விநியோகம் தொடர்ந்து மேற்கொள்ளப்படலாம்.

சசிகலாவை வரவேற்கும் அதிமுக; அரண்டுபோன ஓபிஎஸ், எடப்பாடி!
மேலும் விற்பனை இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் விரல் ரேகை சரிபார்ப்பு முறையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படலாம் என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வழிமுறைகளை பின்பற்றி இனி வரும் நாட்களில் நியாய விலை கடைகளில் பொதுமக்கள் தங்குதடை இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி