ஆப்நகரம்

கலெக்டர் மகள் உலக சாதனை; சின்னஞ்சிறு வயதில் அசத்தல்!

சின்னஞ்சிறு வயதில் கலெக்டர் மகள் படைத்துள்ள புதிய உலக சாதனை பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 12 Jun 2022, 4:25 pm
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இன்று (12.06.2022) நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான சாதனை முயற்சி நிகழ்ச்சி நடந்தது.
Samayam Tamil சிறுமிக்கு சான்று
சிறுமிக்கு சான்று


இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டியின் 3 வயது மகள் மீரா அரவிந்தா இதுவரை தான் கற்ற அஸம்யுத, ஸம்யுத, திருஷ்டி, கிரீவா பேதாஸ் உள்பட 56 நடன முத்திரைகள் மற்றும் 9 நவரசங்கள் செய்து காட்டி உலக சாதனை படைத்தார்.



இந்த நிகழ்ச்சியின் போது சிறுமியான கலெக்டர் மகளை உலக சாதனையாளராக உருவாக்கி இருக்கும் செல்வராணி குமார் என்பவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் கவுரவிக்கப்பட்டார்.

சாதனை படைத்த சிறுமி



இந்த உலக சாதனை புரிந்ததற்காக மற்றும் இந்த சாதனையை நோபல் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தற்காக சான்றிதழ் மற்றும் பதக்கத்தை சிறுமி மீரா அரவிந்தாவுக்கு நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தென் இந்தியா இயக்குநர் திலீபன் மற்றும் நடுவர்கள் ஆகியோர்கள் வழங்கி அங்கீகரித்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சியில் சீமான்?; அர்ஜுன் சம்பத் திடீர் அறிவிப்பு!

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் தென் இந்தியா இயக்குநர் இ.திலீபன், மாநில இயக்குனர் ஜெயக்குமார், நடுவர்கள் பசுபதி, நவீன்ராஜ் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி