ஆப்நகரம்

இருக்கன்குடி அணை சுற்றுச்சுவர் சேதம்; அணையை சீரமைக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி அணையை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 14 Mar 2023, 11:18 am

ஹைலைட்ஸ்:

  • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி அணை
  • அணையை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க கோரிக்கை
  • அணையை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்தவும் கோரிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil இருக்கன்குடி அணை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி அணையை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீமை கருவேல மரங்கள் மற்றும் சகதிகளால் நிரம்பி, சுற்றுச்சுவர் சேதமடைந்து காணப்படும் விருதுநகர் சாத்தூர் இருக்கன்குடி அணையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரிய முறையில் பராமரிக்கப்படாமல் உள்ள விஐதுநகர் மாவட்டஅணைகள்:
குறிப்பாக வறட்சியான மாவட்டமான விருதுநகரில் வைப்பாறு, குண்டாறு, கௌசிகா நதி, அர்ஜுனா நதி உள்ளிட்ட ஆறுகளும், பிளவக்கல் அணை, வெம்பக்கோட்டை அணை, இருக்கன்குடி, ஆனைக்குட்டம், கோவிலாறு, சாஸ்தா கோவில் உள்ளிட்ட அணைகள் இருந்தாலும் அவை உரிய முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது.


சாத்தூர் இருக்கன்குடி அணை வரலாறு:

அதில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி அணை கடந்த 2004 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. வைப்பாறு, அர்ஜுனா நதி ஆகிய இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணை, சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார் பகுதிகள் மட்டுமின்றி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த அணை நீர் ஆதாரமாக விளங்குகிறது.‌

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கட்டப்பட்டது முதல் பராமரிப்பின்றி காணப்படும் அவலம்:


அன்று முதல் தற்போது வரை எவ்வித பராமரிப்பு இன்றியும், அணையை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அணையின் நீர்மட்டம் 22 அடி என்ற நிலையில் தற்போது அணையின் தரைப்பகுதி முழுவதும் சகதிகள் நிறைந்து காணப்படுவதால் போதிய அளவில் நீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த அணையில் சீமை கருவேல மரங்கள் காடு போல் வளர்ந்து அணையை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளது. இந்த அணைக்குரிய நீர்வழிப் பாதைகளில் சீமை கருவேல மரங்களும், செடி கொடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. இதனால் நீரோட்டம் தடைபடுகிறது.

காஞ்சிபுரம் கோயில் திருவிழாவில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி பரிதாப பலி!

அணையை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்த விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை:


அதேபோல் அணையின் சுற்றுச்சுவர் மற்றும் பக்கவாட்டு கைப்பிடி சுவர்கள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் விதமாக பலவீனமாக காட்சியளிக்கிறது.

98 சதவீதம் முடிவடைந்த அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகள்; கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் முத்துசாமி முக்கிய ஆலோசனை!

எனவே இருக்கன்குடி அணையை சீரமைக்கவும், இங்குள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த அணையை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்த அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி விவசாயிகள், மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி