ஆப்நகரம்

நீதிமன்றம் முன் வழக்கறிஞர் நிர்வாணப் போராட்டம்... ஏன்?

தனது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் 31ஆம் தேதி முதல் நீதிமன்றம் முன்பு சாகும் வரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Jul 2020, 3:34 pm
விருதுநகரில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் நிர்வாணமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil சாத்தூர் நீதிமன்ற நுழைவாயில்


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சாத்தூரில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக எவ்வித பணிகளும் இல்லாத காரணத்தால் தனது வாழ்வாதாரம் பாதிக்கபட்டுள்ளதாகவும்,மேலும் தனது வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்க வேண்டியும், சாத்தூர் மெயின்ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நிர்வாணமாக கையில் மனுவுடன் போராட்டத்தில் ஈடுட்டார்.

இதையடுத்து தகவலறிந்த சாத்தூர் நகர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பேராட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டன் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது,தனது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் 31ஆம் தேதி முதல் நீதிமன்றம் முன்பு சாகும் வரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கறிஞர் நிர்வாண போராட்டத்தால் மெயின்ரோட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

350 பேருக்கு வேலை போச்சு... இது நியாயமா ஸ்விகி?

நடுரோட்டில் அதுவும் குறிப்பாக இந்தியாவின் கண்ணியமான இடங்களில் ஒன்றான நீதிமன்ற வாயிலில், ஒரு வழக்கறிஞரே இப்படி அநாகரிகமான போராட்டத்தில் ஈடுபட்டது பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

அடுத்த செய்தி