ஆப்நகரம்

விருதுநகரில் மீண்டும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பு?

அனுமதி எதுவும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வழங்கவில்லை. இருப்பினும், உள்தெருவில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 30 Sep 2020, 7:45 pm
விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் மக்களின் ஒத்துழைப்பு குறைந்து வருவதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனையடுத்து கொரோனா தொற்று மீண்டும் பேரபாயத்துக்கு செல்ல வாய்ப்புண்டு என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.
Samayam Tamil கோப்புப்படம்


குறிப்பாக, அரசு தடை விதித்த காய்கறி அங்காடியை குறுகலான தெருக்களுக்குள் நடத்தத் தொடங்கியுள்ளனர். அபாயம் உணராமல் மக்களும் இந்த காய்கறிச் சந்தையைப் பயன்படுத்தி வருகின்றனர். முன்னதாக விருதுநகர் புதிய பேருந்து நிலையம், உழவா் சந்தை, நகராட்சி மைதானம், தனியாா் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் காய்கனிகள் விற்பனை செய்ய இடம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கனிக் கடைகள் அனைத்தும் நகராட்சி நிா்வாக அனுமதி பெறாமல், உள்தெருவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் விருதுநகரில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

இது தொடர்பாக நகராட்சி ஆணையாளா் பாா்த்தசாரதி தெரிவித்ததாவது:
புதிய பேருந்து நிலையத்தில் மொத்த வியாபாரிகள் காய்கனிகள் விற்பனை செய்து வந்தனா். இந்நிலையில், ஏற்கனவே உள்தெருவில் செயல்பட்டு வந்த காய்கனிக் கடைகளுக்கு வாடகை செலுத்தி வருவதால், அந்த இடத்திற்கு செல்வதாக கேட்டனா்.

ஆனால், அதற்கான அனுமதி எதுவும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் வழங்கவில்லை. இருப்பினும், உள்தெருவில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அடுத்த செய்தி